search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை-சேலம் விமான சேவை நாளை தொடங்குகிறது

    இரண்டு மாதங்களுக்கு பிறகு சென்னை-சேலம் இடையே நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.
    சேலம்:

    சென்னை-சேலம் இடையே நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. 2 மாதங்களுக்கு பிறகு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் தற்போது விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு விமானம் புறப்பட்டு, 8.25 மணிக்கு சேலம் சென்று அடையும். பின்னர் காலை 8.55 மணிக்கு அந்த விமானம் சேலத்தில் இருந்து புறப்பட்டு, 9.50 மணிக்கு சென்னையை வந்து அடையும்.

    மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதால், விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று விமான நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    Next Story
    ×