search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்நிறுத்தம்
    X
    மின்நிறுத்தம்

    திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    திருவண்ணாமலை, சமுத்திரம் மற்றும் தண்டராம்பட்டு ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவண்ணாமலை கிழக்கு, சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதனால் அன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை, தென்றல் நகர், வானவில் நகர், பாலகிருஷ்ணா நகர், ஆர்.ஆர்.நகர், பச்சையம்மாள் நகர், சேரியந்தல், கிருஷ்ணாநகர், வடஆண்டாப்பட்டு, தென்அகரம், துர்க்கை நம்மியந்தல், குண்ணங்குறிஞ்சி, சாணந்தல், களஸ்தம்பாடி, கலர் கொட்டா, தேவனாந்தல், முத்தரசன் பூண்டி, நார்த்தம்பூண்டி, நெல்லிமேடு, சிறுகளம்பாடி, மல்லவாடி, ஊசாம்பாடி, சீலப்பந்தல், கருத்துவம்பாடி, மண்ணை ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    சமுத்திரம், தேன்தமிழ்நகர், அண்ணாநகர், தண்டராம்பட்டு ரோடு, சமுத்திரம் காலனி, பெருந்துறைப்பட்டு, வாழவச்சனூர், சதாகுப்பம், மூங்கில்துறைப்பட்டு நகரம், புரசப்பட்டு, எடத்தனூர், தென்முடியனூர், போந்தை, தானிப்பாடி, காரைக்கால், அருவங்கால், கல்நாட்டுபுதூர் ஆகிய பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலை கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட தச்சம்பட்டு, பெரியகல்லபரி, சு.பாப்பம்பாடி, வெறையூர், திருவானைமுகம், தண்டரை, அப்புப்பட்டு, சு.நல்லூர், சு.வாளவெட்டி, வேடந்தவாடி, வி.பி.குப்பம், நெய்குனி பூதமங்கலம், ஆனந்தல், மன்னம்பட்டி, கலர்பாளையம், ராஜாதோப்பு, கொட்டாவூர், கல்பூண்டி, தள்ளாம்பாடி, அம்பேத்கர் நகர், மேக்களூர், கத்தாழம்பட்டு, வழுதலங்குணம், காட்டுக்குளம், சோமாசிப்பாடி கோவில் மேடு, திடீர் குப்பம், குடம்பை, ராஜந்தாங்கல், சாணிப்பூண்டி, இலுப்பந்தாங்கல், கீழ்கரிபூர், ஏர்ப்பாக்கம், கொளத்தூர், பொன்னாங்குளம், கோணலூர், செல்லங்குப்பம், செய்யலேரி, வேளானந்தல், கெங்கம்பட்டு, நெய்குப்பம், வைப்பூர், ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர் ஆகிய பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட இடையன்கொளத்தூர், கண்ணனூர், கெங்கைசூடாமணி, மேல்வில்லிவளம், வேப்பம்பட்டு, மேல்நந்தியம்பாடி, சூரப்பந்தாங்கல், மரக்கோணம், மோடிப்பட்டு, மடம், இசாகுளத்தூர், மஞ்கனூர், பூங்குணம், வயலூர், அல்லியந்தல், மோசவாடி, மகாதேவி மங்கலம், கட்டமங்கலம், பரிகல்பட்டு, கிண்ணனூர், நமத்தோடு, கொழப்பலூர், ஊத்தூர், ஒதலவாடி, அண்ணாநகர், முடையூர், மலையான்புரவடை, வெங்கடாபுரம், கடம்பை, சாத்தப்பூண்டி, சிங்கம்பூண்டி, ஜெகநாதபுரம், அரசம்பட்டு, பட்டி ஆகிய பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    இந்த தகவலை திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளை சேர்ந்த மின்வாரிய செயற் பொறியாளர்கள் சந்திரசேகரன், ராஜசேகரன், ரவிசந்திரபாபு ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×