search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்திய 4 பேர் கைது

    தஞ்சை வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திய 4 பேரை கைது செய்த போலீசார் 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை-கும்பகோணம் புறவழிச்சாலையில் கிழக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அடுத்தடுத்து 4 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மாட்டு வண்டிகளை வழிமறித்து நிறுத்தினர்.

    அவர்கள் 4 பேரிடமும் நடத்திய விசாரணையில், தஞ்சை கொடிக்காலூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 28), ராஜேந்திரன் (55), அன்பழகன் (54) மற்றும் விஜயராஜ் (36) என்பதும், அவர்கள் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×