search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கீழக்கரை அருகே லாரி விபத்து- ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலி

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே லாரி மோதிய விபத்தில் ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்தவர் அப்ரிதீன் (வயது 21). தனியார் ஆம்புலன்சு டிரைவர். இவர் இன்று அதிகாலை தனது நண்பர் சுல்தான் செய்யது இபுராகிம் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் இருவரும் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை புறப்பட்டனர்.

    திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே உர மூடைகளை ஏற்றி வந்த லாரி வந்தது. தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அப்ரிதீன், சுல்தான் செய்யது இபுராகிம் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    ஆனால் அதற்குள் அப்ரிதீன், சுல்தான் செய்யது இபுராகிம் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் தூத்துக்குடி சொரிமுத்து கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×