என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழக்கரை அருகே லாரி விபத்து- ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்20 May 2020 7:25 AM GMT (Updated: 20 May 2020 7:25 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே லாரி மோதிய விபத்தில் ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்தவர் அப்ரிதீன் (வயது 21). தனியார் ஆம்புலன்சு டிரைவர். இவர் இன்று அதிகாலை தனது நண்பர் சுல்தான் செய்யது இபுராகிம் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் இருவரும் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை புறப்பட்டனர்.
திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே உர மூடைகளை ஏற்றி வந்த லாரி வந்தது. தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அப்ரிதீன், சுல்தான் செய்யது இபுராகிம் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் அதற்குள் அப்ரிதீன், சுல்தான் செய்யது இபுராகிம் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் தூத்துக்குடி சொரிமுத்து கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்தவர் அப்ரிதீன் (வயது 21). தனியார் ஆம்புலன்சு டிரைவர். இவர் இன்று அதிகாலை தனது நண்பர் சுல்தான் செய்யது இபுராகிம் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் இருவரும் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை புறப்பட்டனர்.
திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே உர மூடைகளை ஏற்றி வந்த லாரி வந்தது. தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அப்ரிதீன், சுல்தான் செய்யது இபுராகிம் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் அதற்குள் அப்ரிதீன், சுல்தான் செய்யது இபுராகிம் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் தூத்துக்குடி சொரிமுத்து கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X