search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிப்பு
    X
    தீக்குளிப்பு

    நெகமம் அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

    நெகமம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெகமம்:

    நெகமம் அருகே உள்ள சின்னவதம்பச்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகள் கீதா (23). பட்டதாரியான இவர் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோவிந்தராஜின் வீட்டின் மாடியில் இருந்து புகை வந்தது.

    அப்போது அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அதைகண்டு அங்கு வந்து மாடியில் புகை வருவதை கூறிச் சென்றார். உடனே கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி மாடிக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கீதா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தீயை அணைத்து கீதாவை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    ஆனால் அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×