search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி

    ஊரடங்கு காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    44-வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் தெருவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாநில செயலாளர் வக்கீல் இமயவரம்பன் கலந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×