என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மதுக்கூர் பிரிவு சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது நம்பிவயல் பகுதியை சேர்ந்த உதயநிதி (வயது27), மற்றொருவர் அவரது மைத்துனரும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த வீரபெருமாள் (35) என்றும் தெரிய வந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிள்கள் திருடி வருவது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாப்பா நாடு பகுதியில் திருடு போன 2 புல்லட் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
உதயநிதி மீது சென்னை, ஊட்டி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 150 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பாப்பாநாடு சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அருள் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்