search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது

    ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மதுக்கூர் பிரிவு சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.

    இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது நம்பிவயல் பகுதியை சேர்ந்த உதயநிதி (வயது27), மற்றொருவர் அவரது மைத்துனரும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த வீரபெருமாள் (35) என்றும் தெரிய வந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிள்கள் திருடி வருவது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாப்பா நாடு பகுதியில் திருடு போன 2 புல்லட் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    உதயநிதி​ மீது சென்னை, ஊட்டி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 150 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பாப்பாநாடு சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அருள் தெரிவித்தார்.

    Next Story
    ×