என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வந்தவாசி அருகே வருமான வரித்துறை உதவியாளர் மர்ம காய்ச்சலுக்கு பலி
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தேசூரை சேர்ந்தவர் தயாளன் (59) இவர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு உத்தரவு உள்ளதால் கடந்த 45 நாட்களுக்கு முன்பாக சென்னையில் இருந்து சொந்த ஊரான தேசூருக்கு தனது மனைவி செங்கேணியுடன் வந்தார். கடந்த 29-ந்தேதி அன்று தயாளனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தயாளன் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக தேசூர் போலீசில் இன்று செங்கேணி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து தயாளன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் சாதாரண காய்ச்சலில் தான் இறந்தாரா? அல்லது கொரோனா தாக்கத்தில் இறந்தாரா என மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்