என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குரங்குகள் விஷம் வைத்து சாகடிப்பு- விவசாயி கைது
Byமாலை மலர்24 April 2020 2:21 PM GMT (Updated: 24 April 2020 2:21 PM GMT)
பேச்சிப்பாறை அருகே 3 குரங்குகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது. அன்னாசி பழங்களை நாசப்படுத்திய ஆத்திரத்தில் விஷம் வைத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே மல விளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 52), விவசாயி. இவர் தாணிக்குண்டுவில் ரப்பர் மறு நடவு செய்துள்ள பகுதியை குத்தகைக்கு எடுத்து ஊடுபயிராக அன்னாசி பழம் நடவு செய்து இருந்தார்.
அன்னாசி பழம் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் குரங்குகள் புகுந்து அன்னாசி பழங்களை நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் 3 குரங்குகள் இறந்து கிடந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் ஷாநவாஸ்கான், கணேசன், ராஜகோபால் ஆகியோர் அங்கு விரைந்து சென்று குரங்குகளின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக குலசேகரம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த குரங்குகள் விஷம் தின்றதால் இறந்தது தெரிய வந்தது.
மேலும் அன்னாசி பழங்களை நாசப்படுத்தியதால் விவசாயி சுந்தர்ராஜ் ஆத்திரமடைந்து விஷம் வைத்து 3 குரங்குகளை சாகடித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சுந்தர்ராஜை வன அதிகாரிகள் கைது செய்தனர்.
பேச்சிப்பாறை அருகே மல விளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 52), விவசாயி. இவர் தாணிக்குண்டுவில் ரப்பர் மறு நடவு செய்துள்ள பகுதியை குத்தகைக்கு எடுத்து ஊடுபயிராக அன்னாசி பழம் நடவு செய்து இருந்தார்.
அன்னாசி பழம் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் குரங்குகள் புகுந்து அன்னாசி பழங்களை நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் 3 குரங்குகள் இறந்து கிடந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் ஷாநவாஸ்கான், கணேசன், ராஜகோபால் ஆகியோர் அங்கு விரைந்து சென்று குரங்குகளின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக குலசேகரம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த குரங்குகள் விஷம் தின்றதால் இறந்தது தெரிய வந்தது.
மேலும் அன்னாசி பழங்களை நாசப்படுத்தியதால் விவசாயி சுந்தர்ராஜ் ஆத்திரமடைந்து விஷம் வைத்து 3 குரங்குகளை சாகடித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சுந்தர்ராஜை வன அதிகாரிகள் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X