search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி.
    X
    முதல்வர் பழனிசாமி.

    எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

    பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமணசமய பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மகாவீர் ஜெயந்தி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமணசமய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த இனிய நாளில் உலகில் அன்பும், அறநெறியும் தலைதுவங்கிட மக்கள் அனைவரும் பகவான் மகாவீரரின் போதனைகளை மனதில் நிறுத்தி அன்பு வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×