search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் (கோப்புப்படம்)
    X
    மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் (கோப்புப்படம்)

    மதுரை மாநகரில் 2 நாட்களில் மட்டும் 179 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் 2 நாட்களில் மட்டும் சட்டத்தை மீறியதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 179 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை மாநகரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை மீறுவோர் மீது மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அழகர்கோவில் மெயின்ரோடு- சர்வேயர் காலனி சந்திப்பில் வாகன தணிக்கை நடத்தினார்.

    அப்போது சூர்யா நகர் சுப்பையா தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 27), ஜவகர்லால்புரத்தை சேர்ந்த ரமேஷ் (25), ராமவர்மா நகரை சேர்ந்த மகேந்திரன் (39) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர்.

    இதையடுத்து 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தேவையின்றி சுற்றித்திரிந்தது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாநகரை பொறுத்தவரை கடந்த 2 நாட்களில் மட்டும் 144 தடை சட்டத்தை மீறியதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 179 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தடையை மீறிய சுற்றியதாக ரூ. 73 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×