என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் மரணம்
Byமாலை மலர்23 March 2020 9:40 AM GMT (Updated: 23 March 2020 9:40 AM GMT)
ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்ணமங்கலம்:
ஆரணி அருகே உள்ள முள்ளிப்பட்டு அம்பேத்கார் நகர் ஜெயராமன் மகன் பிரபாகரன் (வயது28). கணியம்பாடியில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 19-ந்தேதி இரவு பிரபாகரன் பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஆரணி செல்லும் ரோட்டில் அத்திமலைப்பட்டு கிராமம் அருகே குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க முயன்றார்.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பிரபாகரனை மீட்டு வேலூர் சி.எம்.சி.யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் நேற்று இறந்து விட்டார்.
இது சம்பந்தமாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பிரபாகரனுக்கு தாட்சாயிணி என்ற மனைவியும், கவிப்பரியன் என்ற மகனும், ஸ்ரீஷா என்ற மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X