search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஆரணி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் மரணம்

    ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கண்ணமங்கலம்:

    ஆரணி அருகே உள்ள முள்ளிப்பட்டு அம்பேத்கார் நகர் ஜெயராமன் மகன் பிரபாகரன் (வயது28). கணியம்பாடியில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். 

    கடந்த 19-ந்தேதி இரவு பிரபாகரன் பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஆரணி செல்லும் ரோட்டில் அத்திமலைப்பட்டு கிராமம் அருகே குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க முயன்றார். 

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பிரபாகரனை மீட்டு வேலூர் சி.எம்.சி.யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் நேற்று இறந்து விட்டார். 

    இது சம்பந்தமாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பிரபாகரனுக்கு தாட்சாயிணி என்ற மனைவியும், கவிப்பரியன் என்ற மகனும், ஸ்ரீஷா என்ற மகளும் உள்ளனர்.

    Next Story
    ×