search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    திருவண்ணாமலையில் ஆயுதப்படை பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

    திருவண்ணாமலையில் ஆயுதப்படை பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவை சேர்ந்தவர் சுவாதி (வயது 25). இவர் திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த இவர் மனவேதனையுடன் இருந்து வந்தாராம். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மீண்டும் காவலர் குடியிருப்புக்கு வந்த சுவாதி, வி‌ஷம் குடித்துவிட்டு தனது தோழிகளுக்கு, போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் விரைந்து வந்து காவலர் குடியிருப்பில் மயங்கி கிடந்த சுவாதியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×