என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் ஆயுதப்படை பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Byமாலை மலர்20 March 2020 10:24 AM GMT (Updated: 20 March 2020 10:24 AM GMT)
திருவண்ணாமலையில் ஆயுதப்படை பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவை சேர்ந்தவர் சுவாதி (வயது 25). இவர் திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த இவர் மனவேதனையுடன் இருந்து வந்தாராம். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மீண்டும் காவலர் குடியிருப்புக்கு வந்த சுவாதி, விஷம் குடித்துவிட்டு தனது தோழிகளுக்கு, போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் விரைந்து வந்து காவலர் குடியிருப்பில் மயங்கி கிடந்த சுவாதியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவை சேர்ந்தவர் சுவாதி (வயது 25). இவர் திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த இவர் மனவேதனையுடன் இருந்து வந்தாராம். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மீண்டும் காவலர் குடியிருப்புக்கு வந்த சுவாதி, விஷம் குடித்துவிட்டு தனது தோழிகளுக்கு, போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் விரைந்து வந்து காவலர் குடியிருப்பில் மயங்கி கிடந்த சுவாதியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X