என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது
Byமாலை மலர்19 March 2020 11:53 AM GMT (Updated: 19 March 2020 11:53 AM GMT)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,
கோவை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளவர் நவீன் (வயது 41). கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அங்குள்ள பஸ் நிலையத்தில் நின்ற சிறுமியிடம் சப்-இன்ஸ்பெக்டர் நவீன் ஆபாசமாக பேசி, செல்போனில் ஆபாசப்படத்தை காண்பித்து தொல்லை கொடுத்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து ஓடிச்சென்று பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினார். பெற்றோர் கசம்பா போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நவீன் தலைமறைவானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் சேலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.
சப்-இன்ஸ்பெக்டர் நவீன் கோவை ஆனைமலையில் பதுங்கிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆனைமலை வந்த கேரள போலீசார் நவீனை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளவர் நவீன் (வயது 41). கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அங்குள்ள பஸ் நிலையத்தில் நின்ற சிறுமியிடம் சப்-இன்ஸ்பெக்டர் நவீன் ஆபாசமாக பேசி, செல்போனில் ஆபாசப்படத்தை காண்பித்து தொல்லை கொடுத்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து ஓடிச்சென்று பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினார். பெற்றோர் கசம்பா போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நவீன் தலைமறைவானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் சேலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.
சப்-இன்ஸ்பெக்டர் நவீன் கோவை ஆனைமலையில் பதுங்கிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆனைமலை வந்த கேரள போலீசார் நவீனை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X