search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சாலை விபத்தில் காயமடைந்தவர் கூடுதல் இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டுவோரின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க போலீசார் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். 

    கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதம்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க தனிப்பிரிவை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×