search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு
    X
    பூண்டி ஏரிக்கு

    ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 600 கனஅடியாக அதிகரிப்பு

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நீர் வரத்து வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்தது.

    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    அதன்படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஒரே தவணையில் கண்டலேறு அணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. கண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும்.

    இதில் 5 டி.எம்.சி. கொள்ளளவு வரை தண்ணீரை வெளியேற்றலாம். இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் கடந்த 4-ந் தேதி ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வலியுறுத்தினர்.

    இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதலாக 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடுவதாக ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன்ரெட்டி உறுதி அளித்தார். அதன்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இத்தனை நாட்களாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நீர் வரத்து வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 28. 64 அடியாக பதிவானது. 1445 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 313 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கன அடி தண்ணீரும் அனுப்படுகிறது.

    Next Story
    ×