search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கணவர் மது குடித்து வந்து தாக்கியதால் வேதனை: மனைவி-மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

    போரூர் அருகே கணவர் மது குடித்து வந்து தாக்கியதால் மனைவி மற்றும் மகள் விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பிரேமா (வயது 38) டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சரோஜா (17).

    ரமேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு 11 மணி அளவில் ரமேஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதை மனைவி பிரேமா கண்டித்தார் இதனால் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.

    அப்போது ரமேஷ், மனைவி பிரேமாவை அடித்து உதைத்தார். இதில் மன வேதனை அடைந்த பிரேமா வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்தார் தாய் எலி மருந்து குடிப்பதை பார்த்த மகள் சரோஜாவும் மீதி இருந்த எலி மருந்தை தாயிடம் இருந்து பிடுங்கி குடித்தார்.

    இதில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய பிரேமா, சரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×