search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் அரிசி
    X
    ரேசன் அரிசி

    விருதுநகரில் 31 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

    விருதுநகரில் ரைஸ் மில்லில் பதுக்கிய 31 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரைஸ்மில் உள்ளது. இங்கு ரே‌ஷன் அரிசி பதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கோட்டைப்பட்டி வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஊழியர்கள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 31 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    31 மூட்டைகளில் இருந்த 1,550 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவை நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    ரேசன் அரிசி பதுக்கியது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×