என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்3 March 2020 11:13 AM GMT (Updated: 3 March 2020 11:13 AM GMT)
திருவண்ணாமலையில் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது28), இவரது மனைவி நிவேதிதா (25). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிவேதிதாவின் உறவினர் ஒருவர் கடந்த வாரம் சென்னையில் இறந்து விட்டார். அவரது காரிய நிகழ்ச்சிக்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.
நேற்று மதியம் வீடு திரும்பிய பிரபாகரன், நிவேதிதா ஆகியோர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், டவுன் டி.எஸ்.பி.அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது28), இவரது மனைவி நிவேதிதா (25). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிவேதிதாவின் உறவினர் ஒருவர் கடந்த வாரம் சென்னையில் இறந்து விட்டார். அவரது காரிய நிகழ்ச்சிக்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.
நேற்று மதியம் வீடு திரும்பிய பிரபாகரன், நிவேதிதா ஆகியோர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், டவுன் டி.எஸ்.பி.அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X