search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    மேற்கு மாம்பலம் அருகே 2 வாலிபரிடம் செல்போன் பறிப்பு

    மேற்கு மாம்பலம் அருகே 2 வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பாலகிருஷ்ணன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவர் அசோக் நகரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு 12.30மணி அளவில் அசோக் நகர் 7-வது அவென்யூ சந்திப்பில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் லோகேசின் செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதேபோல் கோடம்பாக்கத்தில் கவுதமன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் செல்போனை பறித்து சென்றது. இந்த 2 செல்போன் பறிப்பிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    Next Story
    ×