என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் பூட்டிய வீட்டிற்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதுன் பாதியா. இவரது மனைவி ஷிலாதேவி(வயது30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
மிதுன் பாதியா தனது குடும்பத்தினருடன் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் கொங்கு வ.உ.சி.நகரில் வசித்து அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் மிதுன் பாதியா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஷிலாதேவி மட்டும் இருந்தார்.
இந்த நிலையில் மிதுன்பாதியா தனது மனைவிக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. திரும்ப, திரும்ப போன் செய்து பார்த்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மிதுன் பாதியா அருகில் வசித்து வருபவர்களுக்கு போன் செய்தார். அவர்களிடம் என் வீட்டில் எனது மனைவி உள்ளாரா பாருங்கள் என்று கூறினார்.
இதையடுத்து அவர்கள் மிதுன்பாதியா வீட்டிற்கு சென்று சத்தம் கொடுத்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் கதவை தட்டினர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது அறையில் ஷிலா தேவி பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து மிதுன் பாதியாவுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஷிலாதேவி மர்மமான முறையில் வீட்டிற்குள் இறந்து கிடந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த அறிகுறியும் வீட்டில் இல்லை. எனவே அவரை யாரோ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் ஷிலாதேவியை கொலை செய்து விட்டு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் முழுவிவரமும் தெரியவரும் என்றர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்