search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குன்னத்தூர் வார சந்தையில் ரூ. 20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

    குன்னத்தூரில் நேற்று நடைபெற்ற வார சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூ. 20 லட்சத்திற்கு விற்பனையானது.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் வாரசந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறும்.

    இப்பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் இங்குள்ள மக்கள் ஆடு, மாடுகளை அதிகம் வளர்த்து வருகிறார்கள். குன்னத்தூர் சந்தைக்கு ஈரோடு, கோபி, பெருந்துறை, அந்தியூர், மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வரும்.

    அதே போல் குன்னத்தூர் சந்தைக்கு வெள்ளாடு மற்றும் செம்மறி வாங்க கோவை, அவினாசி, திருப்பூர், ஈரோடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருவார்கள். நேற்று நடைபெற்ற குன்னத்தூர் சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூ. 20 லட்சத்திற்கு விற்பனையானது.
    Next Story
    ×