search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்கராபரணி ஆற்றில் லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

    சங்கராபரணி ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றில் இருந்து லாரி மூலம் மணல் கடத்தப்பட்டு எடுத்து வருவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    பத்துகண்ணு சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி லாரியைஓட்டிவந்த டிரைவர் மற்றும் உடன்வந்த மற்றொருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வளவனூரை சேர்ந்த அய்யப்பன் (வயது24) மற்றும் தனஞ்செயன் என்பதும் இவர்கள் பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×