என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கனூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்25 Feb 2020 9:30 AM GMT (Updated: 25 Feb 2020 9:30 AM GMT)
திருக்கனூர் அருகே நோய் கொடுமை காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கலைச்செல்வன் (வயது28), விவசாய கூலிவேலை செய்து வந்தார். கலைச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதற்காக அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கலைச்செல்வன் நோய் கொடுமையால் துடித்தார். அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி அவரது தங்கை தீபா குளிக்க சென்றார். பின்னர் குளித்து விட்டு வந்து பார்த்த போது கலைச்செல்வன் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கலைச்செல்வனை தூக்கில் இருந்து மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கலைச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கனூர் அருகே சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கலைச்செல்வன் (வயது28), விவசாய கூலிவேலை செய்து வந்தார். கலைச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதற்காக அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கலைச்செல்வன் நோய் கொடுமையால் துடித்தார். அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி அவரது தங்கை தீபா குளிக்க சென்றார். பின்னர் குளித்து விட்டு வந்து பார்த்த போது கலைச்செல்வன் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கலைச்செல்வனை தூக்கில் இருந்து மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கலைச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X