search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அபிராமபுரம் கூவம் பகுதியில் 3 மணல் லாரிகள் சிக்கியது

    சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் மணல் அள்ளி 3 லாரிகளை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் லாரியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அபிராமபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மணலுடன் நின்ற 3 லாரிகளை பிடித்தனர்.

    லாரியில் ‘பொதுப்பணித்துறை’ என்று ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இங்கு மணல் அள்ள அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாரி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×