என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முருங்கப்பாக்கத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்21 Feb 2020 9:35 AM GMT (Updated: 21 Feb 2020 9:35 AM GMT)
புதுவை முருங்கப்பாக்கத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் மகாலட்சுமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அன்புதாஸ் (வயது31). இவர் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரும் விழுப்புரத்தை சேர்ந்த ஜோசி(31) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதற்கிடையே குழந்தையை பார்த்து கொள்வது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இதுபோல் அவர்களிடம் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இரவு அவர்கள் தனித்தனி அறையில் தூங்க சென்றனர்.
நேற்று காலை வேலைக்கு செல்ல வெகுநேரம் ஆகியும் கணவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த ஜோசி படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் அன்புதாஸ் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஜோசி காரில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அன்புதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை முருங்கப்பாக்கம் மகாலட்சுமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அன்புதாஸ் (வயது31). இவர் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரும் விழுப்புரத்தை சேர்ந்த ஜோசி(31) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதற்கிடையே குழந்தையை பார்த்து கொள்வது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இதுபோல் அவர்களிடம் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இரவு அவர்கள் தனித்தனி அறையில் தூங்க சென்றனர்.
நேற்று காலை வேலைக்கு செல்ல வெகுநேரம் ஆகியும் கணவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த ஜோசி படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் அன்புதாஸ் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஜோசி காரில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அன்புதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X