என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலையம்பட்டி குப்பைக்கிடங்கில் தீ விபத்து
Byமாலை மலர்20 Feb 2020 6:11 PM GMT (Updated: 20 Feb 2020 6:11 PM GMT)
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை டிராக்டர்களில் ஏற்றி தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பாலையம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கு அருகே பாலையம்பட்டி துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவிலாங்குளம், கோபாலபுரம், ராமனுஜபுரம், பாலையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குப்பைக்கிடங்கில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் மின்வாரிய அலுவலகத்தினரும், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இங்கு கொட்டப்படும் குப்பைகளில் திடீரென தீ விபத்து ஏற்படும்போது, தீ மளமளவென அருகில் உள்ள மின்வாரியத்தை நோக்கி பரவுகிறது. இதனால் இப்பகுதியில் அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே இந்த நிலை வராமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கை சுற்றி சுவர் எழுப்பி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை டிராக்டர்களில் ஏற்றி தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பாலையம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கு அருகே பாலையம்பட்டி துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவிலாங்குளம், கோபாலபுரம், ராமனுஜபுரம், பாலையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குப்பைக்கிடங்கில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் மின்வாரிய அலுவலகத்தினரும், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இங்கு கொட்டப்படும் குப்பைகளில் திடீரென தீ விபத்து ஏற்படும்போது, தீ மளமளவென அருகில் உள்ள மின்வாரியத்தை நோக்கி பரவுகிறது. இதனால் இப்பகுதியில் அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே இந்த நிலை வராமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கை சுற்றி சுவர் எழுப்பி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X