என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தன்குடியில் தென்னந்தோப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
Byமாலை மலர்17 Feb 2020 2:31 PM GMT (Updated: 17 Feb 2020 2:31 PM GMT)
சித்தன்குடியில் தென்னந்தோப்பில் காசு வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சித்தன்குடியில் உள்ள தென்னந்தோப்பில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வெங்கட்டா-பாலன்நகரை சேர்ந்த விக்டர் (வயது51), முத்தியால்பேட்டை அம்பலவாணன் நகரை சேர்ந்த மணிகண்டன் (24). சாரம் தென்றல் நகரை சேர்ந்த ரிச்சர்டு (26), செல்லதுரை (30), ஜீவா நகரை சேர்ந்த சிவக்குமார் (43), சத்யராஜ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், சூதாட்ட பணம் 4,870 மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X