search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரும்பு வியாபாரி: போலீசார் விசாரணை

    கோவையில் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரும்பு வியாபாரி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ஆத்துப்பாலம் கே.எம். காலனியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 48). இரும்பு வியாபாரி. இவர் கடந்த 15-ந் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் சத்திய மங்கலத்துக்கு இரும்பு வாங்க செல்வதாக கூறி சென்றார்.

    ஆனால் அதன் பின்னர் அப்துல் அஜீஸ் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பள்ளி வாசலில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதற்காக சாய்பாபா காலனி போலீசார் ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை எடுக்குமாறு அறிவுறுத்தி வந்தனர்.

    அப்போது ரோட்டோ ரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் மட்டும் செல்லாமல் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.

    இதனை பார்த்த போலீசார் காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது காரில் டிரைவர் இருக்கையில் மூக்கில் ரத்தம் வழிந்தபடி ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்தார்.இதனை பார்த்த போலீசார் உடனடியாக அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஆத்துப்பாலத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர் எப்படி இங்கு வந்தார்.இவருடன் வேறு யாராவது வந்தார்களா? இயற்கையான முறையில் இறந்தாரா அல்லது தொழில்போட்டி காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×