என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கரிவலம் வந்த நல்லூரில் லாரியில் மணல் கடத்தியவர் கைது
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்த நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அவர்கள் மகாதேவர்பட்டி அருகே உள்ள ஆற்றங்கரையில் சென்றபோது அங்கு 3 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். போலீசாரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயன்றார்கள். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள உமைய தலைவன்பட்டியை சேர்ந்த சீனிபாண்டி என்பதும், தப்பியோடிய 2 பேர் மகாதேவர்பட்டியை சேர்ந்த பொன்மாடசாமி, கரிசல்குளத்தை சேர்ந்த திருப்பதி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சீனி பாண்டியை போலீசார் கைது செய்து, மணல் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்