என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலத்தகராறில் பயங்கர கோஷ்டி மோதல் - சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்
Byமாலை மலர்11 Feb 2020 9:42 AM GMT (Updated: 11 Feb 2020 9:42 AM GMT)
காரைக்கால் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே விழிதியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகானந்தம், பலராமன். இவர்களிடையே ஆற்றங் கரை ஓரம் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி மோதி உள்ளனர்.
நேற்று இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி கம்புகளால் தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அவர்கள் மோதலை விடவில்லை.
இந்த மோதலின் போது கற்கள் வீசப்பட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், போலீஸ்காரர்கள் எழிலரசன், பாபு ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் பல்வால், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினர்மீது போலீசார் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். அந்த பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
காரைக்கால் அருகே விழிதியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகானந்தம், பலராமன். இவர்களிடையே ஆற்றங் கரை ஓரம் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி மோதி உள்ளனர்.
நேற்று இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி கம்புகளால் தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அவர்கள் மோதலை விடவில்லை.
இந்த மோதலின் போது கற்கள் வீசப்பட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், போலீஸ்காரர்கள் எழிலரசன், பாபு ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் பல்வால், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினர்மீது போலீசார் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். அந்த பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X