என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் பணம் கைமாறியது எப்படி? சித்தாண்டி வாக்குமூலம்
Byமாலை மலர்6 Feb 2020 3:40 AM GMT (Updated: 6 Feb 2020 3:40 AM GMT)
ரூ.2 கோடி அளவுக்கு பணம் பெற்று, 22 பேரை அரசு வேலைக்கு சேர்த்து விட்டேன் என்று போலீஸ்காரர் சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.
முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தினமும் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள். இந்த வழக்கில் போலீஸ் துறையை சேர்ந்த போலீஸ்காரர்கள் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
ஏற்கனவே சென்னையில் ஆயுதப்படையில் வேலை பார்த்த முத்துக்குமார் என்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சென்னை போலீஸ்காரர் சித்தாண்டியும் சிவகங்கை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ்காரர் சித்தாண்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பூபதி என்ற இன்னொரு போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டார்.
சித்தாண்டியும், பூபதியும் இணைந்து முறைகேடாக இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வு மூலம் ஏராளமான பேரை அரசு வேலைக்கு சேர்த்துள்ளனர். மேலும் சில போலீஸ்காரர்கள் கைதாவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் போலீஸ்காரர் சித்தாண்டி கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-
எனது நண்பரும், போலீஸ்காரருமான முத்துக்குமாரிடம் நான் பணத்தை கொடுத்தேன். அவர் விழுப்புரம் மாவட்டம், அரியூர் கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தி என்பவர் மூலம் ஜெயக்குமாரிடம் பணத்தை கொடுத்தார். கிராம நிர்வாக அதிகாரி சக்திக்கும் இந்த முறைகேடுகளில் முக்கிய பங்கு உண்டு. ஒருவேளை வேலை கிடைக்காமல் போனால், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கைதான இன்னொரு போலீஸ்காரர் பூபதி ரூ.55 லட்சத்தை கொடுத்து 5 பேரை வேலைக்கு சேர்த்து விட்டதாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாருடன் இணைந்து செயல்பட்டுள்ள, கிராம நிர்வாக அதிகாரி சக்தியும் கைது செய்யப்பட உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X