என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெட்டியார்பாளையத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை
Byமாலை மலர்5 Feb 2020 9:20 AM GMT (Updated: 5 Feb 2020 9:20 AM GMT)
புதுவை ரெட்டியார்பாளையத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் பெருமாள் ராஜா கார்டன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெலிக்ஸ். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது மனைவி செக்யூரா (வயது 70).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெலிக்ஸ் இறந்து போனார். இதன் பின்னர் செக்யூரா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே செக்யூரா வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த ஜெயா நகரை சேர்ந்த அமுதா என்ற பெண் கடந்த 3 மாதங்களாக வீட்டு வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில் செக்யூரா தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது 20 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். நகையை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
நகை கொள்ளை போய் இருந்த நிலையில் வீட்டு வேலை செய்து வந்த அமுதா திடீரென வேலையை விட்டு நின்றதால் அவர் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என செக்யூரா சந்தேகம் அடைந்தார்.
இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அமுதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை ரெட்டியார்பாளையம் பெருமாள் ராஜா கார்டன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெலிக்ஸ். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது மனைவி செக்யூரா (வயது 70).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெலிக்ஸ் இறந்து போனார். இதன் பின்னர் செக்யூரா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே செக்யூரா வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த ஜெயா நகரை சேர்ந்த அமுதா என்ற பெண் கடந்த 3 மாதங்களாக வீட்டு வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில் செக்யூரா தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது 20 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். நகையை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
நகை கொள்ளை போய் இருந்த நிலையில் வீட்டு வேலை செய்து வந்த அமுதா திடீரென வேலையை விட்டு நின்றதால் அவர் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என செக்யூரா சந்தேகம் அடைந்தார்.
இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அமுதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X