என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதியமான்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதல்- பெண் பலி
Byமாலை மலர்4 Feb 2020 5:11 PM GMT (Updated: 4 Feb 2020 5:11 PM GMT)
அதியமான்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள போடூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவர்களது மனைவி மாதம்மாள் (வயது50). திருமண அமைப்பாளர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பெண் பார்ப்பதற்கு தருமபுரிக்கு அங்கமுத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து மாதம்மாள் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதியமான்கோட்டை தனியார் கல்லூரி அருகே வரும் போது அந்த வழியாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மாதம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த வரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மாதம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X