search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

    திருவொற்றியூர் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரை அடுத்த காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் 13-வது தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணபிரசாத், ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி பரமேஸ்வரி. இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பரமேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்து புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதற்கிடையே கிருஷ்ண பிரசாத் மனைவியின் நடத்தை குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் பரமேஸ்வரி, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

    கிருஷ்ணபிரசாத்-பர மேஸ்வரியை கடந்த 2 நாட்களை அழைத்து மகளிர் போலீசார் கவுன்சிலிங் ஆலோசனை வழங்கி வந்தனர்.

    இன்று 3-வது நாளாக இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்து இருந்தனர்.

    இன்று காலை போலீஸ் நிலையத்துக்கு வந்த பரமேஸ்வரி திடீரென போலீஸ் நிலையம் முன்பு நின்றபடி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூச்சலிட்டார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த போலீசார் பரமேஸ்வரி மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இச்சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×