என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தினவிழாவையொட்டி கோவையில் 3500 போலீசார் பாதுகாப்பு
Byமாலை மலர்24 Jan 2020 10:18 AM GMT (Updated: 24 Jan 2020 10:18 AM GMT)
கோவையில் குடியரசு தின விழாவையொட்டி 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை:
குடியரசு தினம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தின நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் குடியரசு தின விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் பொதுக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ்நிலையம், ரெயில்நிலையம் போன்ற இடங்களில் ரோந்து சென்று பாதுபாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல புறநகர் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு யாரையும் செல்ல விடாமல் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை நுழைவாயிலில் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் ரெயில்வே பிளாட்பாரங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் குடியரசு தின விழாவையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
குடியரசு தினம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தின நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் குடியரசு தின விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் பொதுக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ்நிலையம், ரெயில்நிலையம் போன்ற இடங்களில் ரோந்து சென்று பாதுபாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல புறநகர் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு யாரையும் செல்ல விடாமல் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை நுழைவாயிலில் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் ரெயில்வே பிளாட்பாரங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் குடியரசு தின விழாவையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X