search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் அலுவலகம் கொள்ளை
    X
    தபால் அலுவலகம் கொள்ளை

    இருகூர் அருகே தபால் அலுவலகத்தில் பணம் கொள்ளை

    இருகூர் அருகே தபால் அலுவலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை இருகூர் அருகே உள்ளது செல்வ விநாயகர் கோவில். இங்கு தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் போஸ்மாஸ்டராக உள்ளவர் அய்யாசாமி.

    சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து ஊழியர்கள் தபால் அலுவலகத்தை பூட்டி சென்றனர். நேற்று காலை அய்யாசாமி வழக்கம் போல் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது தபால் அலுவலக கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு லாக்கரும் உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் அதிலிருந்த ரூ.19 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் சிங்காநல்லூர் போலீசாரில் புகார் செய்தார். போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தபால் அலுவலகத்தில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×