என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடியில் மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் பெங்களூரில் மீட்பு
Byமாலை மலர்22 Jan 2020 9:26 AM GMT (Updated: 22 Jan 2020 9:26 AM GMT)
ஆவடியில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் பெங்களூருவில் மீட்கப்பட்டார்கள்.
ஆவடி:
காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்கள். பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மாயமான 4 மாணவிகளும் பெங்களூரில் இருப்பது தெரிந்தது.
அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்படி ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு பெங்களூர் விரைந்தனர்.
தனிப்படை போலீசார் பெங்களூர் போலீசார் உதவியுடன் பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்த நான்கு மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்களை நேற்று நள்ளிரவில் ஆவடிக்கு அழைத்து வந்தனர்.
மாணவிகள் 4 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டு இருப்பதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவ்வப்போது கண்டித்தனர். இது பிடிக்காத மாணவிகள் பள்ளிக்கு போகாமல் பெங்களூர் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்கள். பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மாயமான 4 மாணவிகளும் பெங்களூரில் இருப்பது தெரிந்தது.
அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்படி ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு பெங்களூர் விரைந்தனர்.
தனிப்படை போலீசார் பெங்களூர் போலீசார் உதவியுடன் பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்த நான்கு மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்களை நேற்று நள்ளிரவில் ஆவடிக்கு அழைத்து வந்தனர்.
மாணவிகள் 4 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டு இருப்பதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவ்வப்போது கண்டித்தனர். இது பிடிக்காத மாணவிகள் பள்ளிக்கு போகாமல் பெங்களூர் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X