என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல் - 6 பேர்கைது
Byமாலை மலர்22 Jan 2020 8:59 AM GMT (Updated: 22 Jan 2020 8:59 AM GMT)
ஊத்துக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியவண்ணான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன்கள் ஆனந்தன், அரவிந்தன்.
சமீபத்தில் நடந்து முடிந்த பெரிணவண்ணான்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் அமுதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிகுமார் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அமுதாவின் ஆதரவாளர் நீலநாதன் என்பவருக்கும், சசிகுமாரின் ஆதரவாளர் நீலமேகம் என் பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் இரு தரப்பை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து ஆனந்தன், அரவிந்தன், நீலநாதன் மற்றும் சசிகுமார் தரப்பை சேர்ந்த ஞான மூர்த்தி, அருணகிரி, லட்சுமணன் ஆகிய 6 பேரை கைது செய்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியவண்ணான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன்கள் ஆனந்தன், அரவிந்தன்.
சமீபத்தில் நடந்து முடிந்த பெரிணவண்ணான்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் அமுதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிகுமார் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அமுதாவின் ஆதரவாளர் நீலநாதன் என்பவருக்கும், சசிகுமாரின் ஆதரவாளர் நீலமேகம் என் பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் இரு தரப்பை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து ஆனந்தன், அரவிந்தன், நீலநாதன் மற்றும் சசிகுமார் தரப்பை சேர்ந்த ஞான மூர்த்தி, அருணகிரி, லட்சுமணன் ஆகிய 6 பேரை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X