என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலம் அருகே வாகனம் மோதி ஜே.சி.பி. ஆபரேட்டர் பலி
Byமாலை மலர்19 Jan 2020 5:32 PM GMT (Updated: 19 Jan 2020 5:32 PM GMT)
காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஜே.சி.பி. ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங் கலத்தை அடுத்துள்ள ஏலகிரியான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ராஜ்குமார் (வயது30). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதி.
இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று காரிமங்கலத்தில் இருந்து தருமபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெரியாம்பட்டி பாலம் அருகே வந்தபோது அவர் தனது வாகனத்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X