search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    காரிமங்கலம் அருகே வாகனம் மோதி ஜே.சி.பி. ஆபரேட்டர் பலி

    காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஜே.சி.பி. ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங் கலத்தை அடுத்துள்ள ஏலகிரியான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ராஜ்குமார் (வயது30). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதி.

    இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று காரிமங்கலத்தில் இருந்து தருமபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெரியாம்பட்டி பாலம் அருகே வந்தபோது அவர் தனது வாகனத்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம்  எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×