என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இல்லை- நிர்மலா சீதாராமன் பேச்சு
சென்னை:
சென்னை தியாகராய நகரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கூட்டத்தில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
நமது நாட்டில் குடியுரிமை சட்டம் என்பது 1995 முதல் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் எந்த பிரச்சினையும் இல்லை.
குடியுரிமை என்பது யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல. உரிமையை கொடுப்பதுதான். இலங்கை உள்பட பல நாடுகளில் இருந்து வந்து முகாம்களில் அடைந்து கிடப்பவர்களை பார்த்தால் வேதனையாக உள்ளது.
உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்காதீர்கள்.
யாருடைய குடியுரிமை பறிபோகும் என்று கூறுகிறார்களோ அவர்களிடம் உண்மையை விளக்க தயாராக இருக்கிறோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்ட மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் இல்லை.
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்வது சட்டத்துக்கு புறம்பானது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்