என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு
Byமாலை மலர்18 Jan 2020 10:20 AM GMT (Updated: 18 Jan 2020 10:20 AM GMT)
ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த என்ஜினீயரிங் மாணவர் அழகர்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை:
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விமரிசையாக நடந்தது. இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
இவர்களில் மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள், பாதுகாப்பு போலீசாரும் காளைகள் முட்டியதில் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சோழவந்தானைச் சேர்ந்த ஸ்ரீதர், செக்கானூரணியைச் சேர்ந்த செல்லப்பாண்டி ஆகியோர் இறந்தனர். இதில் ஸ்ரீதர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மற்றொரு என்ஜினீயரிங் மாணவர் அழகர்சாமி (21) இன்று காலை இறந்தார்.
மதுரை உச்ச பரம்பு மேடு பகுதியைச் சேர்ந்த இவர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காணச் சென்றபோது மாடு முட்டியது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அழகர்சாமி இன்று பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விமரிசையாக நடந்தது. இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
இவர்களில் மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள், பாதுகாப்பு போலீசாரும் காளைகள் முட்டியதில் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சோழவந்தானைச் சேர்ந்த ஸ்ரீதர், செக்கானூரணியைச் சேர்ந்த செல்லப்பாண்டி ஆகியோர் இறந்தனர். இதில் ஸ்ரீதர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மற்றொரு என்ஜினீயரிங் மாணவர் அழகர்சாமி (21) இன்று காலை இறந்தார்.
மதுரை உச்ச பரம்பு மேடு பகுதியைச் சேர்ந்த இவர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காணச் சென்றபோது மாடு முட்டியது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அழகர்சாமி இன்று பரிதாபமாக இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X