search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

    கும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அருகே உள்ள பழைய பாலக்கரை ஆபிதீன் நகரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 33). கள்ளச்சாராய வியாபாரி.

    இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் சங்கர்கணேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி சங்கர் கணேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×