search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    தானிப்பாடி அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதி 2 பேர் பலி

    திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த முடியனூரை சேர்ந்த குமார் மகன் பிரகாஷ் (வயது 18). இவர் நேற்று இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் திருவள்ளூரில் இருந்து தானிப்பாடி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    நெருஞ்சிபாடி பழைய பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அதே ஊரை சேர்ந்த விவசாயி ராயர் (வயது 56) பைக்கில் வந்தார். இருவரது பைக்கும் எதிர் பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராயர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    படுகாயமடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×