search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருப்பூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

    கோவையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருப்பூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்டு கொடுத்தது.
    கோவை:

    கோவை ராமநாதபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையில் வழக்கின் சாட்சிகள் விசாரணை, தற்போது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் கலையரசிக்கு 5 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் இன்ஸ்பெக்டர் கலையரசி கோர்ட்டில் ஆஜராகவில்லை.இதைத் தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.

    இவர் தற்போது திருப்பூர் மாவட்ட பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×