search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக்
    X
    டாஸ்மாக்

    தஞ்சையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் அறிவிப்பு

    தஞ்சை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய 2 நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுபான பார்கள் மற்றும் தனியார் விடுதியில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

    இதேபோல் 26-ம் தேதி வரும் குடியரசு தினத்தையொட்டியும் அரசு டாஸ்மாக் கடை, மதுபான கடைகள் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×