என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாடானை அருகே டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற அரசு பெண் ஊழியர்
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவடிமதியூர் என்று அழைக்கப்படும் கொத்தார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்-வாசுகி தம்பதியருக்கு 2 மகள்கள்.
ராஜேந்திரன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மகள் ராஜபிருந்தா (வயது26). இவர் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணி தேர்வான டி.என்.பி.எஸ்.சி.யில் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணி புரிந்து வந்தார். அப்போது திருமண ஏற்பாடு நடை பெற்றது.
தற்போது திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு எழுதினார். அதில் டி.எஸ்.பி.யாக தேர்வாகி உள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ராஜபிருந்தாவை பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்