search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎஸ்பி"

    • சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
    • கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.

    இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.

    • உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
    • காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இருந்து வருபவர் தங்கவேலு.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு சி.சி.ஏ. என்ற வழக்கில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 26.6. 2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    அந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு 26.6.2023-ந் தேதி கடந்த பின்பும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இன்று (16-ந் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின் காரணமாக அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • நடிகர் விஜய் சேதுபதி 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    டி.எஸ்.பி

    இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.


    டி.எஸ்.பி போஸ்டர்

    அதன்படி, உப்புளியப்பன் என்ற கதாபாத்திரத்தில் சிங்கம்புலியும் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் தீபாவும் முருக பாண்டி கதாபாத்திரத்தில் இளவரசும் நடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி  தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.



    • விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிஎஸ்பி'.
    • இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.


    டிஎஸ்பி படக்குழு

    மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விஜய் சேதுபதி

    இதையடுத்து 'டிஎஸ்பி' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக செய்வதில்லை. இயக்குனர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.


    கமல்ஹாசன்

    கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றி" என்று பேசினார். 

    • நடிகர் கமல்ஹாசன் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
    • இவர் விஜய் சேதுபதி 'டிஎஸ்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

    நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். சமீபத்தில் ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சென்னை திரும்பினார்.


    கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.


    கமல்ஹாசன்

    அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம் உடல்நலம் குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு கமல் கூறியதாவது, "முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்தபோதுகூட அடுத்தப் படத்தின் ஷுட்டிங் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால்கூட என்னைப் பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகிறது. அதற்கு காரணம், ஒன்று ஊடகம், பெருகிவரும் அன்பு என்று நான் நம்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படம் ‘டிஎஸ்பி’.
    • இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.


    டி.எஸ்.பி

    மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.


    டி.எஸ்.பி

    இந்நிலையில், 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவந்து வருகிறது.

    விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

     

    டிஎஸ்பி

    டிஎஸ்பி

    மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

     

    டிஎஸ்பி

    டிஎஸ்பி

    இந்நிலையில்' டிஎஸ்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ள்து. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் பொன்ராம் இயக்கிவரும் 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கனவன் ஈர்த்தது.

     

    டிஎஸ்பி

    டிஎஸ்பி

    இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நல்லா இரும்மா' என்ற இந்த பாடலை விஜய் முத்துபாண்டி எழுதியுள்ளார். உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர், போலி சான்றிதழை சமர்பித்ததாக கூறி அவருக்கு வழங்கப்பட்ட டிஎஸ்பி பதவியை பஞ்சாப் அரசு திரும்பபெற்றுள்ளது. #HarmanpreetKaur
    சண்டிகர்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரின்  நாக் அவுட் போட்டியில் 171  ரன்களை குவித்தார். மேலும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம்  இந்திய அணியை இறுதி போட்டிக்கு வரை எடுத்துச்சென்றார்.

    இவரது செயலை பாராட்டும் விதமாக பஞ்சாப் மாநில முதல்வர் அமிர்ந்தர் சிங் இவருக்கு டிஎஸ்பி பதவியை வழங்குவதாக தெரிவித்தார், இதையெடுத்து கடந்த மார்ச் 1ஆம் தேதி இவர் பஞ்சாப் போலீசில் டிஎஸ்பியாக பொறுப்பெற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் இவரது கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் போது இவர் மீரட்டில் இருக்கும் சவுதாரி சரன் சிங் பல்கலைகழகத்தில் பயின்றதாக கூறி சமர்பிக்கபட்ட சான்றிதழ் பொய்யானவை என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநில அரசு இவரை டிஎஸ்பி பதிவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளனர். 

    பட்டப்படிப்பு போலி என கண்டறியப்பட்டுள்ளதால், அவரது 12-ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ஏற்ப அவர் கான்ஸ்டபிள் நிலையில் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இவர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிவரும் காரணத்தால் இவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை போலியான சான்றிதழ்களை வழங்கிய காரணத்தால்  இவர் மீது வழக்கு தொடுத்தால் இவரது அர்ஜூனா விருதும் பறிபோகும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
    ×