search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm yogi adityanath"

    • சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
    • கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.

    இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.

    • உ.பி.யில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பிரதமர், உபி முதல் மந்திரி படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளார்.
    • இதையடுத்து அந்தத் தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.

    உ.பி.யின் மதுரா நகர், நிகாமில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் படங்களை எடுத்துச் சென்றுள்ளார்.

    இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.

    விசாரணையில், அந்த ஒப்பந்தத் தொழிலாளி பிரதமர் மற்றும் சில தலைவர்களின் படங்களைத் தவறுதலாக குப்பை வண்டியில் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது என மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

    பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்குள் நுழைந்துள்ளது தொடர்பாக விமர்சித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பூஜ்யத்துடன் இன்னொரு பூஜ்யம் சேர்ந்தாலும் பூஜ்யம்தான் வரும் என தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #YogiAdiyanath
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, அக்கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. அனேகமாக, தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடக் கூடும் என தெரிகிறது. 



    இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரியங்கா ஒன்றும் முதல் முறையாக தீவிர அரசியலுக்குள் நுழையவில்லை. கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போதும், உ.பி. சட்டசபை தேர்தலின் போதும் பிரியங்கா காந்தி காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். அக்கட்சியின் துரதிருஷ்டம் அப்போது ஆரம்பித்தது. இப்போதும் அதே நிலைதான் ஏற்படும்.

    பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் ஒன்றும் மாறிவிடாது. பூஜ்யம் பூஜ்யம்தான். காங்கிரஸ் ஒரு பெரிய பூஜ்யம், அதில் யார் இணைந்தாலும், அதுவும் பூஜ்யம்தான் என தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #YogiAdiyanath
    உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். #BJP #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.



    அதோடு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, ஷெட், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #BJP #YogiAdityanath
    உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார். #YogiAdityanath #DefenceExpo
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ராணுவ கண்காட்சி 2018 கடந்த புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச மாநில தொழிற்துறை மந்திரி சதிஷ் மஹானா எடுத்துள்ளார்.



    இந்நிலையில், கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார்.

    அப்போது அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் பல்வேரு சாதனங்கள் இயங்கும் செயல் முறைகளை கேட்டறிந்தார். #YogiAdityanath #DefenceExpo
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் நகரில் உள்ள ராசுல்பூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் துரிதமான மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கிடங்குகள் மற்றும் விற்பனை கூடங்களின் பாதுகாப்பு குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
    உத்தரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்டமான ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியில் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்து இருந்த பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் இறுதி முடிவு ஏற்படவில்லை. இது தொடர்பான வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்ட ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், அயோத்தியில் சரயு நதிக்கரையில் மிக பிரமாண்டமாக 107 மீட்டர் உயரத்தில் (351 அடி) ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை 44 மீட்டர் (144 அடி) உயரம் உள்ள பீடத்தில் வைக்கப்படுகிறது. ஆக சிலை, பீடம் இரண்டும் சேர்ந்து மொத்த உயரம் 151 மீட்டர் (495 அடி) ஆகும்.



    இந்த சிலையை சரயு நதிக்கரையில் சரியாக எந்த இடத்தில் வைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராமர் சிலை வெண்கலத்தில், டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த சிற்பியால் உருவாக்கப்படுகிறது. இந்த சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின்போது திறந்து வைக்கிறார்.

    சிலை வைக்கப்படுகிற இடத்தையொட்டி, அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு கலைக்கூடமும், கலை அரங்கமும் இடம் பெற்றிருக்கும்.

    அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் ராமபிரானின் ஒட்டுமொத்த வாழ்வு சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் இடம் பெறும். கலையரங்கைப் பொறுத்தமட்டில் நாட்டின் பல்வேறு அமைப்புகளும் ‘ராம்லீலா’வை அரங்கேற்றுவதற்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். கலையரங்கில் ‘லேசர்’ படக்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். #UPHeavyRain #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரமாக பெய்து வரும்  கனமழையில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளனர்.

    கான்பூரில் உள்ள கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அபாய அளவை தாண்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  இதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டரில் சென்று இன்று பார்வையிட்டார்.

    பஸ்தி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளில் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #UPHeavyRain #YogiAdityanath
    உத்தரப்பிரதசம் மாநிலத்தில் ஒருமாதமாக பெய்த கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ள நிலையில் வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் யோகி ஆதித்யாநாத் ஆய்வு செய்தார். #UPrains #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை பெய்து வருகிறது.  கடந்த ஒருமாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    குறிப்பாக, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்பட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடானது.



    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் இதுவரை சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் வெள்ள லக்கிம்பூர் கெரி, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் சென்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆய்வு செய்து வருகிறார். #UPrains #YogiAdityanath #YogiAdityanathaerialsurvey #UPfloodaffectedareas

    ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் என யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

    ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிப் பாதுகாக்கும் பொறுப்புகளை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் பரிந்துரையை உ.பி. மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 

    உ.பி. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உங்களால் தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். முதல் மந்திரி நாற்காலியை இதுபோல் தனியார் நிறுவனத்துக்கு அளித்து பாதுகாக்க செய்ய முடியுமா? என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ் கல்லீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #UPCMYogi #YogiAdityanathFather #AIIMS

    டேராடூன்:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத். இவரது தந்தை ஆனந்த் சிங் பிஷ். இவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், ஆனந்த் சிங் பிஷ்ஷுக்கு இன்று கல்லீரலில் கடும் வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை  மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என டாக்டர்க்ள் தெரிவித்தனர். #UPCMYogi #YogiAdityanathFather #AIIMS
    உ.பி. முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பப்பட்டதால் பத்தாம் வகுப்பில் 7வது இடம் பிடித்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வதி இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா.

    கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார்.

    இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், காசோலையை திருப்பி அனுப்பியதற்காக அபராத கட்டணத்தையும் மிஸ்ராவிடம் வசூலித்தது.

    இதையறிந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அந்த காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    ×