என் மலர்
நீங்கள் தேடியது "CM Yogi Adityanath"
- சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
- கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.
- உ.பி.யில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பிரதமர், உபி முதல் மந்திரி படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளார்.
- இதையடுத்து அந்தத் தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.
உ.பி.யின் மதுரா நகர், நிகாமில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் படங்களை எடுத்துச் சென்றுள்ளார்.
இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.
விசாரணையில், அந்த ஒப்பந்தத் தொழிலாளி பிரதமர் மற்றும் சில தலைவர்களின் படங்களைத் தவறுதலாக குப்பை வண்டியில் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது என மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.


அதோடு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, ஷெட், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #BJP #YogiAdityanath

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் நகரில் உள்ள ராசுல்பூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் துரிதமான மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கிடங்குகள் மற்றும் விற்பனை கூடங்களின் பாதுகாப்பு குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த ஒருமாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் இதுவரை சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் வெள்ள லக்கிம்பூர் கெரி, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் சென்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆய்வு செய்து வருகிறார். #UPrains #YogiAdityanath #YogiAdityanathaerialsurvey #UPfloodaffectedareas






