என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மெரினா-நீலாங்கரையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி
சென்னை:
நீலாங்கரை அருகே உள்ள அக்கரையில் நேற்று காலை தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் குளித்தனர்.
அப்போது, விஷ்ணு, சசிக்குமார் ஆகிய 2 மாணவர்கள் கடலில் மூழ்கினர். மற்ற மாணவர்கள் 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் மாணவர் சசிக்குமார் மீட்கப்பட்டார். ஆனால் விஷ்ணு கடலில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முடியவில்லை.
கடலில் மூழ்கி பலியான விஷ்ணுவின் உடல் சிறிது நேரத்திலேயே கரை ஒதுங்கியது. இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மெரினா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் 17 வயது வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. கடலில் மூழ்கி பலியான அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அண்ணாசதுக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடலும் கரை ஒதுங்கியுள்ளது. அவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்